Friday 22 April 2016

அன்பே மான்சி – பாகம் 10

மாலை மணி 5 மூர்த்தி,நிவேதா,விஷ்ணு,என எல்லோரும் வந்து காத்திருக்க மனதில் ஏகப்பட்டகுழப்பங்கள்,கேள்விகள்,சஞ்சலங்களுமாக சத்யனும் காத்திருந்தான் அப்போது மான்சியின் அத்தை லேபர் ரூமிலிருந்து பதட்டமாக வர ரேவதி என்னாச்சு அண்ணி என்று விசாரிக்க அத்தை புலம்ப ஆரம்பித்தாள் இந்த மான்சிக்கு என்னாச்சுன்னு தெரியல டாக்டரம்மா எவ்வளவோ முயற்சி பண்றாங்க இவளும் ஒத்துழைச்சாதான குழந்தை பிறக்கும் வலி வர்ர நேரத்துல மூச்சை மேலுக்கு இழுக்கிறா ஏண்டி இப்படி பண்றேன்னா கேவி கேவி அழறா கேவாத குழந்தை மேலுக்கு ஏறிக்கும்மான்னா இவ மதிக்காம சாவறேன்ங்குறா இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு சிசேரியன் பண்ணிரலாம்ன்னு டாக்டரம்மா சொல்றாங்க இவ ஆப்ரேஷன் வேனாங்றா ஏன் இப்படி செய்றான்னு தெரியலை என்று அத்தை புலம்ப அதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த சத்யன் மான்சி ஏன் இப்படி செய்கிறாள்ன்னு புரிய நேராக அங்கிருந்த நர்ஸ்சிடம் ‘நான் மான்சியோட புருஷன் நான் அவளை பார்க்கனும் அவகிட்ட பேசனும் அவகூட இருக்கனும் என்னை உள்ளே அனுமதியுங்க என்று கேட்க அந்த நர்ஸ் இவனை வித்யாசமா பார்த்துட்டு இருங்க டாக்டர்கிட்ட கேட்டுட்டு வர்றேன் என்று உள்ளே போக போன வேகதத்தில் திரும்ப வந்து இவனை வாங்க என்று உள்ளே அழைத்து போனாள் உள்ளே மான்சி படுக்க வைக்கப்பட்டிருக்க அவள் கால்கள் மடக்கப்பட்டு முட்டியில் பெல்ட் போட்டு மாட்டப்பட்டிருந்தது அவள் உடலில் புடவை இல்லை வெறும் ஜாக்கெட் மட்டுமே இருக்க மடக்கிய முட்டிமீது பச்சை நிற துணி போட்டு மூடப்பட்டிருக்க மிகவும் சோர்ந்து கலைத்து தெரிந்தாள் மான்சி வேகமாக அவளருகில் சென்ற சத்யன் ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க மறு கையை எடுத்து தன் மார்பில் வைத்து அழுத்த அவள் கண்விழித்து இவனை பார்த்து திகைக்க சத்யன் மெதுவாக அவள் காதருகில் குனிந்து பேச ஆரம்பித்தான் மான்சி ‘நான் எந்த தப்பு செய்திருந்தாலும் அதுக்காக இந்த சமயத்தில் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ப்ளீஸ் என்னை மன்னிச்சிரும்மா என் மேல் இருக்கிற கோபத்தில் குழந்தையை பழிவாங்காத மான்சி நீ நல்லபடியாக வீட்டுக்கு வந்ததும் எல்லா பிரச்சினையும் பேசி தீர்க்கலாம் உலகத்தில் தீர்வே இல்லாத பிரச்சினை எதுவும் கிடையாது ப்ளீஸ் மான்சி முயற்சி செய்து குழந்தையை வெளியே கொண்டு வாம்மா உருக்கமாக சத்யன் வேன்ட அப்போது அவளுக்கு அதி தீவிரமாக இடைவெளி இல்லாது வலி வர இன்னும் கொஞ்சம்தான் ம்ம்ம் புஷ் பண்ணும்மா மான்சி ம் ஒன் டூ த்ரீ என்று டாக்டர் குரல் கொடுக்க மான்சி மூச்சை அழுத்தி முக்கி கீழ் வழியாக விட்டாள் உடம்பின் மொத்த ரத்தமும் முகத்தில் பாய சிவந்த முகத்தோடு கண்களை இறுக மூடி பற்களை கடித்து முக்கி தன் குழந்தையை வெளியே தள்ள முயற்ச்சிக்க அவனது பிள்ளையை பெற அவள் படும் கஷ்டத்தை பார்த்து சத்யனுக்கு கண்ணீர் வரும் போல் இருந்தது மாலை மணி 6-25 தனது தாயின் பக்க சுவர்களை பிளந்து அவளின் உதிரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு தனது அழுகுரலால் அந்த அறையையே கிடுகிடுக்க வைத்துக்கொண்டு வெளியே வந்தது குழந்தை குழந்தையின் அழுகுரல் கேட்டு சத்யன் திரும்பி பார்க்க ஆண் குழந்தை சார் என்றாள் புன்னகையுடன் நர்ஸ் நீங்க வெளியே போங்க சார் இனிமேல் நாங்க பார்த்துக்குவோம் என டாக்டர் கூற சத்யன் திரும்பி மான்சியை பார்த்தான் அவள் அரை மயக்கத்தில் கலைத்து கண்மூடி கிடந்தாள் அவளின் நெற்றியில் தனது உதடுகளை மெனமையாக பதித்துவிட்டு சத்யன் வெளியே வர குடும்பம் முழுவதும் அவனை மொய்த்து கொண்டது குழந்தை பிறந்திருச்சா என்ன குழந்தை என்று எல்லோரும் கேட்க ம்ம் ஆண் குழந்தை என்றான் முகம் முழுவதும் புன்னகையோடு அவனுக்கு எங்கே பறப்பது போல் இருந்தது கடும் கோடையில் வரும் குளிர் தென்றலாய் இருந்தது அவனது குழந்தையின் பிறப்பு வேலு ஓடி வந்து சத்யனுக்கு கைகொடுத்து வாழ்த்தினான் சத்யனுக்கோ அந்த வானமே தன் வசப்பட்டது போல் இருந்தது வருடத்துக்கு ஒருமுறைதான் வசந்தம் வரும் சத்யனுக்கு மட்டும் இனி வருடம் முழுவதும் வசந்தம் வரும் போல் இருந்தது ஆனால் மான்சியின் நிலை இவனுடன் இணைவாளா காலம்தான் பதில் சொல்ல வேன்டும் வேலு வந்து சாப்பிட அழைத்த பிறகுதான் பசியின் உணர்வே வந்தது சத்யனுக்கு வேலுவிடம் சிறிது பணத்தை கொடுத்து இருப்பவர்களின் தேவைகளை கவனித்துவிட்டு மறுபடியும் ஹோட்டல் சென்று சத்யன் குளித்து சுத்தமாகி வருவதற்க்குள் மான்சியை அறைக்கு மாற்றி இருந்தார்கள் வந்தவன் நேராக மான்சியிடம் வர அவள் உறங்கிக்கொண்டிருந்தள் குழந்தையின் தொட்டிலருகே போய்ப்பார்க்க வெள்ளைநிற டவலில் முகம் மட்டும் தெரியும்படி சுற்றப்பட்டிருந்தது குழந்தை ரொம்ப அழகாக இருந்தது குழந்தை மான்சி ஒரு பூங்கொத்து என்றால் குழந்தை ஒற்றை ரோஜா போல் இருந்தது சத்யனுக்கு குழந்தையை தொட்டு பார்க்கவேன்டும் போல இருந்தது இது என் குழந்தை எனது ரத்தம் என்று மனதுக்குள் கர்வப்பட்டான் தொட்டிலருகே வந்த ரேவதி குழந்தை யார்மாதிறின்னு தெரியல ஆனா வலது கையில் ஆறு விரல் இருக்கு என்றவள் டவலை நீக்கி குழந்தையின் விரல்களை பிரித்து காண்பிக்க அங்கே சுண்டுவிரல் அருகே ஒரு சிறு சதை துணுக்கு ஆறாவது விரலாக உறுவாக்கியிருந்தது ஆச்சரியமாக இருந்தது சத்யனுக்கு கடவுளின் ஜித்து விளையாட்டை என்னி சிலிர்த்தது சத்யனுக்கு எவளை வேன்டாம் என்று வெறுத்தாளே அவன் அம்மா அவளின் வயிற்றிலேயே அவன் அம்மாவின் ஜெராக்ஸ் என நினைத்தவன் குழந்தையை தொட்டு தொட்டு பார்த்தான் மான்சி விழிக்க காத்திருந்தான் அந்த நிமிடத்தில் சத்யன் சில முடிவுகள் எடுத்தான் தனது உள்ளத்தில் பூக்கும் நேச பூக்களை கொண்டு தன் மனைவியை அர்ச்சிப்பது என்ற முடிவு தனது நேச சரங்களை எய்து தன் மனைவியை வீழ்த்துவது என்ற முடிவு தனது அன்பு ஆசை நேசம் பாசம் காதல் கனிவு அத்தனைக்கும் இனிமேல் மான்சிதான் சொந்தக்காரி என்ற முடிவு அன்றிலிருந்து சத்யன் தலைகீழாக மாறிப்போனான் மான்சியின் ஒற்றை விழிப் பார்வைக்காக ஏங்கினான் தவித்தான் கைநீட்டி அவளிடம் காதலை யாசித்தான் தன் குறும்புப் பார்வைகளாலும் காதல் பேச்சுகளாலும் அவளுக்கு தன் மனதை புரியவைக்க முயற்ச்சித்தான் அவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது தான் ஏன் இப்படி மாறிப்போனோம் என்று ஆனால் இது பிடித்தது மனைவிடம் கைநீட்டி காதலை யாசிப்பது அவனுக்கு பிடித்தது விரும்புகிறேன் என்று உன் இதழ்கள் உதிர்க்கின்ற முத்துசொற்கள் சந்தமாக வேன்டும் எனக்கு கூடவே உன் இதழ்களும் வேன்டும் சொந்தமாக சத்யனின் கனவுகள் மெய்ப்பாடுமா மான்சி தூங்கி கொண்டே இருந்தாள் அவள் விழிக்கவில்லை என்றதும் ரேவதியிடம் காலை வருவதாக கூறிவிட்டு வெளியே வந்து ஹோட்டலுக்கு கிளம்பினான் போகும்போது வேலுவிடம் உனக்கு எத்தனை பசங்க என்று விசாரித்தான் ரெண்டு பசங்க சார் எனறான் வேலு ‘பசங்க யார்மாதிரி இருப்பாங்க, ‘ பெரியவ பொண்ணு என் தங்கச்சி மாதிரி சின்னவன் பையன் என் ஒய்ப் மாதிரி சார், என்ற வேலு ‘உங்க குழந்தை யாரு மாதிரி இருக்கு சார், என்று பதிலுக்கு கேட்க ‘என் அம்மா மாதிரி, எனறு கர்வமாக கூறிய சத்யன் ‘ஏன் வேலு நீ என்கூடவே கோவை வந்திடேன் அங்கே ஆறு கார்கள் இருக்கு பேமிலியையும் கூட்டிட்டு வந்துடேன் எங்க வீட்டு பின்னாடி வேலை செய்றவங்களுக்காக வீடுகட்டியிருக்கோம் அங்கேயே தங்கிக்கலாம், என்று சத்யன் கேட்டான் வேலுவுக்கும் சத்யனை ரொம்ப பிடித்து போனது ‘எங்க வீட்டுல கலந்துகிட்டு சொல்றேன் சார்,என்றான் காலையில் மணி 10-20 க்குத்தான் மான்சியை பார்க்க வந்தான் அறைக்குள் ஒரு கூட்டமே இருக்க யாரையும் கவனிக்காமல் நேராக மான்சியிடம் வந்தான் அவள் முகத்தை கைகளில் ஏந்தி எப்படியிருக்க மான்சி என்று அவள் கண்ணத்தில் அழுத்தி முத்தமிட்ட இதை எதிர்ப்பார்க்காத மான்சி தடுமாற அங்கே இருந்த நிவேதாவும் விஷ்ணுவும் வாய்பொத்தி சிரிக்க திரும்பி அவர்களை பார்த்த சத்யன் ஏய் என்ன சிரிக்கிறீங்க என் பொண்டாட்டிக்கு நான் குடுத்தேன் என்று குறும்புடன் சொல்ல மான்சிதான் அடப்பாவி எல்லார் முன்னாடியும் என்னம்மா நடிக்கிறான் என்று ஆத்திரப்பட்டாள் அப்போது கைகளில் நிறைய பைகளுடன் வேலு வர அத்தை எனக்கு தெரிஞ்சவரைக்கும் குழந்தைக்கு தேவையானது வாங்கியிருக்கேன் என்றான் சத்யன் ம் சரிங்க தம்பி உங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டீங்களா என்று ரேவதி கேட்க இன்னும் இல்லை இப்பதான் சொல்லனும் என்றவன் தனது செல்லை எடுத்து உயிர்பிக்க உடனே எதிர் முனையில் எடுக்கப்பட்டது

No comments:

Post a Comment

மனைவியின் கள்ளச் செயல்கள் - பாகம் - 8

  ஹா ஹா … என் புருஷனுக்கு கொஞ்சம் மிச்சம் மீதி வைடா … வச்சிடுவோம் அவருக்கு இல்லாததா … சிவா கொஞ்சம் குழம்பு ஊத்துங்க … ஹே ...